மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை ஆரம்பித்தல் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை ஆரம்பித்தல் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்!


பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பித்த பின்னர் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க தேவையான திட்ட வரைபுகளை தயாரித்து வருவதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.


சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் கடைப்பிடித்து மேலதிக வகுப்புகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.


$ads={2}


கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.


´மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதனால் மிக விரைவாக கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதற்கான திட்டமிடல்கள் இடம்பெறுகின்றன. 


2021 ஆம் ஆண்டில் மாணவர்களின் பாடசாலை கல்வி சுமூகமாக இடம்பெறும் என நம்புகின்றோம். மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் எவராவது கொரோனா தொற்றுக்கு உள்ளானால் விரைவாக அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எவ்வாறு என்பதை கலந்து ஆலோசித்து தீர்மானிக்கவுள்ளோம். 


$ads={1}


மற்றயது ஏனையவர்களை எவ்வாறு தொற்றிலிருந்து பாதுகாப்பது என்பது குறித்தும் கலந்து முடிவு எடுக்கப்படும். மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதற்கமைய மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க தேவையான சுகாதார வழிக்காட்டல்கள் தயாரிக்கப்படுகின்றன. 2021ஆம் ஆண்டு பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு இணையாக மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதே எமது நோக்கம்´ என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.