முஸ்லிம்களின் மத கோட்பாடுகளை மதிக்காவிடின் மதரீதியிலான அமைதியின்மை உருவாகலாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களின் மத கோட்பாடுகளை மதிக்காவிடின் மதரீதியிலான அமைதியின்மை உருவாகலாம்!

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் மத கோட்பாடுகளை மதிக்கவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரசினால் மரணிப்பவர்களின் சடலங்களை கையாள்வது குறித்து ஆரிவியல் ரீதியிலான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கைகளை மதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

முஸ்லிம் மக்களின் மத கோட்பாடுகளை மதிக்கதவறினால் மதரீதியிலான அமைதியின்மை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள சில குழுவினர் இனவாதத்தை தூண்டுகின்றனர் என தெரிவித்த ஜேவிபியின் தலைவர்,  இதனால் நீண்ட காலத்திற்கு ஐக்கியமின்மை ஏற்படலாம் என தெரிவித்துள்ளதுடன் அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகமுக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இலங்கையின் ஆட்சியாளாகள் இனவாதத்தினை பரப்பி வந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் மாவனல்லையில் புத்தர் சிலை மீது கல்வீசப்பட்ட சம்பவத்தினை பயனபடுத்தி இனவெறியை தூண்ட முயற்சி இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.