குற்றங்கள் இழைப்பவர்களுக்கு விரைவில் தண்டனை; நீதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குற்றங்கள் இழைப்பவர்களுக்கு விரைவில் தண்டனை; நீதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல்!


அச்சம், சந்தேகம் இல்லாத சமூகம் ஒன்றை உருவாக்க குற்றங்களுக்கு எதிரான நியாயமான  பொறிமுறையினூடாக குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நீதி அமைச்சர் அலிசப்ரியை இன்று (18) நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடும்போதே இது தொடர்பாக ஆராயப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 


$ads={2}


இந்த கலந்துரையாடலின் போது, போதை பொருள் வியாபாரிகள், அதனை வநியோகிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்க தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் வெளிநாடுகளில் இருக்கும் போதைப்பாெருள் வியாபாரிகளை நாட்டுக்கு அழைத்துவரவும், அந்த வியாபார வலைத்தளத்தை இல்லாமலாக்கவும் தேவையான செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


அதேபாேன்று சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகளை குறுகிய காலத்துக்குள் விசாரணை செய்து, மேல் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க ஆராயப்பட்டுள்ளது.


அத்துடன் இது தொடர்பாக இருக்கும் சட்ட திட்டங்களில் குறைபாடுகள் இருக்குமாக இருந்தால், அதனை இனம் கண்டு, தேவையான சட்ட திருத்தங்களை விரைவில் மேற்கொள்ளவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.