பாராளுமன்ற கொத்தணி - மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற கொத்தணி - மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி!

கடந்த தினங்களின் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து இலங்கை பாராளுமன்ற ஊழியர்கள் 04 நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மற்றும் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 463 நபர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் கடந்த சில தினங்களுக்கு  முன்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.


$ads={2}

 அவர்களில் 4 பாராளுமனர ஊழியர்கள் தொற்றுக்கு இலக்கானதை தொடர்ந்து சிகிச்சைக்காக சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 கடந்த 13 ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற வணிகக் குழுவின் கூட்டம் அடுத்த திங்கட்கிழமை (18) நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க கடந்த வாரம் தெரிவித்தார்.


 பாராளுமன்ற வணிகத்திற்கான குழுவின் இந்த கூட்டம் ஜனவரி 19 ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்ட பாராளுமன்ற வாரத்திற்கான சபையின் வணிகம் குறித்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.

 இலங்கையில் இதுவரை 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.