மன்னாரில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மன்னாரில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு!


மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா தொற்று மரணம் நேற்று (22) பதிவாகியதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேர் புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த வாரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 2 இல் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நேரம் குறித்த விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டமையினால் இவருக்கும் பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் பீ.சி.ஆர் பரிசோதனையின் போது தொற்று இல்லை என தெரிய வந்தது. இந்த நிலையில் குறித்த நபர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவருக்கு நேற்று முந்தினம் இரவு சடுதியாக நோய் நிலை அதிகரித்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.

உயிரிழந்த பின் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் மன்னார் மாவட்டத்தில் 2 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது. இவர்கள் இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விடுதி 2இல் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த போது அங்கு இருந்த நோயாளியுடன் தொடர்புபட்ட நிலையில் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்புகின்றோம்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.