ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 'மாத்தளை ஸஹ்ரான்' எனும் நபர் தொடர்பான தகவல்கள் அம்பலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 'மாத்தளை ஸஹ்ரான்' எனும் நபர் தொடர்பான தகவல்கள் அம்பலம்!


ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத அமைப்பு நேரடியாக தொடர்புபடவில்லை என்பதும், தாக்குதலின் பின்னர் அதற்கான பொறுப்பை ஐ.ஸ் ஏற்பதற்கான நடவடிக்கைகளை 'மாத்தளை ஸஹ்ரான்' எனும் சந்தேக நபரே முன்னெடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் தகவல்  வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


தனது ஆலோசனைகளின் கீழ், சிஐடியின் டிஜிட்டல், கணினிக்குற்றம் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி, பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன ஆகியோரின் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளில் இது தெரிய வந்ததாக சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.


ஈஸ்டர் ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவின் கேள்விகளுக்கு பதிலளித்து சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.


-எம்.எப்.எம்.பஸீர்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.