மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை! – கல்வி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை! – கல்வி அமைச்சர்


மேல் மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக ஆரம்பமாகும் என கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் நிலவரம் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்டதாக காணப்படும் ஒவ்வொரு நகரத்திலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த கருத்தினை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் ஒரேநேரத்தில் ஆரம்பிக்க முடியாது என்பதால் படிப்படியாக பாடசாலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் உள்ள 1,576 பாடசாலைகளில் 900 பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டமுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.