காதிமார்களை இணைப்பதற்கும் நீதி அமைச்சிற்கும் தொடர்பில்லை! -அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதிமார்களை இணைப்பதற்கும் நீதி அமைச்சிற்கும் தொடர்பில்லை! -அலி சப்ரி

காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்திற்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சிற்கும் எந்த விதமான தொடர்புமில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தவறான தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. காதி சட்டம் கடந்த 70 வருடங்களாக நாட்டில் காணப்படுகிறது. அந்த நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்காகவே காதிமார்கள் இணைக்கப்படுகின்றனர்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கும் நீதியமைச்சிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.