கொழும்பு துறைமுகத்தை விற்பனை செய்யவோ குத்தகைக்கு விடவோ மாட்டோம்! பிரதமர் அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு துறைமுகத்தை விற்பனை செய்யவோ குத்தகைக்கு விடவோ மாட்டோம்! பிரதமர் அதிரடி!


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குத்தகைக்கு விடவோ அல்லது விற்பனை செய்யவோபடாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் நம்மை குற்றம் சுமத்த வேண்டியதில்லை எனவும், கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ திட்டமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கிழக்கு முனையம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், இந்த விடயம் தொழிற்சங்கங்களுக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கிழக்கு முனையத்தை விற்பனை செய்வது அல்லது குத்தகைக்கு விடுவது குறித்து எந்தவொரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை கூட நடாத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதில்லை எனவும், தன்னிடம் கேட்டிருந்தால் உண்மை நிலைமையை தெளிவுபடுத்தியிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதியும், அமைச்சரவையின் பெரும்பான்மையினரும் சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சொத்துக்களை விற்பனை செய்யும் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சியினுடையது எனவும், அந்தக் கொள்கை தமது அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.