தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நிறுனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நிறுனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 1,223 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறிகையில், மேல் மாகாணத்தில் காணப்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் சுகாதார பிரிவினரும், பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். அதற்கமைய இதுவரையில் 9 ஆயிரத்து 495 நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது 8 ஆயிரத்து 272 நிறுவனங்களில் உரிய சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் , எஞ்சிய ஆயிரத்து 223 நிறுவனங்களில் முறையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 837 நிறுவனங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது 774 நிறுவனங்கள் முறையான சட்டவிதிகளை பின்பற்றியிருந்ததுடன் , 63 நிறுவனங்கள் அந்த சட்டவிதிகளை கடைப்பிடித்திருக்கவில்லை.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து நிறுவனங்களையும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு நாம் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்ற நிலையிலும் சில நிறுவனங்கள் அந்த விதிமுறைகளை கவனத்திற் கொள்ளாமல் இருக்கின்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.