மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 1,223 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறிகையில், மேல் மாகாணத்தில் காணப்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் சுகாதார பிரிவினரும், பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். அதற்கமைய இதுவரையில் 9 ஆயிரத்து 495 நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது 8 ஆயிரத்து 272 நிறுவனங்களில் உரிய சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் , எஞ்சிய ஆயிரத்து 223 நிறுவனங்களில் முறையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 837 நிறுவனங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது 774 நிறுவனங்கள் முறையான சட்டவிதிகளை பின்பற்றியிருந்ததுடன் , 63 நிறுவனங்கள் அந்த சட்டவிதிகளை கடைப்பிடித்திருக்கவில்லை.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து நிறுவனங்களையும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு நாம் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்ற நிலையிலும் சில நிறுவனங்கள் அந்த விதிமுறைகளை கவனத்திற் கொள்ளாமல் இருக்கின்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறிகையில், மேல் மாகாணத்தில் காணப்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் சுகாதார பிரிவினரும், பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். அதற்கமைய இதுவரையில் 9 ஆயிரத்து 495 நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது 8 ஆயிரத்து 272 நிறுவனங்களில் உரிய சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் , எஞ்சிய ஆயிரத்து 223 நிறுவனங்களில் முறையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 837 நிறுவனங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது 774 நிறுவனங்கள் முறையான சட்டவிதிகளை பின்பற்றியிருந்ததுடன் , 63 நிறுவனங்கள் அந்த சட்டவிதிகளை கடைப்பிடித்திருக்கவில்லை.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து நிறுவனங்களையும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு நாம் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்ற நிலையிலும் சில நிறுவனங்கள் அந்த விதிமுறைகளை கவனத்திற் கொள்ளாமல் இருக்கின்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.