நாடு பூராவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடு பூராவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!


வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அத்துடன், நாட்டின் தென்கிழக்கு பிராந்திய வளிமண்டலத்திற்கு கீழாக ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை காரணமாக, அடுத்து வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்குமென அறிவிக்க்பட்டுள்ளது.


$ads={2}


மேலும், நாட்டின் ஏனைய சில மாகாணங்களில் பிற்பகல் வேளையில், 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படுமெனவும் தெரிவிக்கபட்டுள்ளது.


இந்நிலையில், அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.


இதன்போது, குறித்த கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகவும் காணப்படும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.