கல்கிசை மற்றும் காத்தான்குடி பகுதிகளில் இருந்து மரணங்கள் பதிவு! சற்றுமுன்னர் வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்கிசை மற்றும் காத்தான்குடி பகுதிகளில் இருந்து மரணங்கள் பதிவு! சற்றுமுன்னர் வெளியான தகவல்!


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளமை இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


$ads={2}


இதன்படி கல்கிசை, காத்தான்குடி, வெல்லம்பிட்டிய மற்றும் ஓபநாயக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது.


இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 297 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 47,602 ஆக உயர்வடைந்துள்ளது.


மேலும், மினுவாங்கொடை - பேலியகொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 43,844 ஆக காணப்படுகிறது.


அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 521 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 40,838 ஆக உயர்வடைந்துள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் பேரில் 723 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.