இலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்!!


அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறை ஒன்றில் மோதி சிக்குண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கப்பம் மீட்கப்பட்டது.


எம்.வி. யுரோசன் கப்பலை நகர்த்தும் கடல் கீழ் மீட்பு முயற்சிகளில் இலங்கை கடற்படையினர் இன்று (24) ஈடுபட்டிருந்தனர். இதன்போது கப்பலின் கீழ் பகுதியில் ஒரு பாகம் கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டதுடன் கப்பலின் கீழ் பாகத்துக்கும் ஓரளவு சேதமும் ஏற்பட்டுள்ளதையும் இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.




-ஆர்.யசி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.