இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கொரோனா - தொடர்பினை பேணியவர்களை இனங்கானும் பணிகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கொரோனா - தொடர்பினை பேணியவர்களை இனங்கானும் பணிகள் ஆரம்பம்!

இரு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவிருக்கும் ஒருநாள் சர்வதேச (ODI) மற்றும் இருபதுக்கு இருபது (T20) சர்வதேச  தொடர்களுக்காக வீரர்கள் பயிற்சி பெற்று வந்ததாக இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தெரிவித்துள்ளது.


$ads={2}

வீரர்கள் கொழும்பில் மூன்று தனித்தனி குழுக்களில் பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

தொற்றுக்கு இலக்கான இரண்டு வீரர்களும் கொரோனா சிகிச்சைகளுக்காக சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்படவுள்ளதாக SLC தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பினை பேணிய பிற வீரர்களை அடையாளம் காண சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குழுக்களாக பயிற்சி நடத்தப்பட்டதால், சகல வீரர்களும் கொரோனா தொற்றுக்கு இலக்கான கிரிக்கெட் வீரர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவில்லை என்று SLC தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.