சகல அரச நிறுவனங்களுக்கும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சகல அரச நிறுவனங்களுக்கும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்!


நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரையில் சகல அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உள்நாட்டலுவல்கள் அமைச்சு இது தொடர்பில் சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 மற்றும் 04 ஆம் திகதி அரச நிறுவனங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


73ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வு எதிர்வரும் 04 ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.