வாட்ஸாப் செயலியின் தனியுரிமை கொள்கை தொடர்பாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாட்ஸாப் செயலியின் தனியுரிமை கொள்கை தொடர்பாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கை!


வாட்ஸாப் செயலியின் தனியுரிமைக் கொள்கையின் (Privacy Policy) புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், அதன் பயனர்களின் செயல்பாடுகளை வாட்ஸாப் செயலியின் மூலம் கண்காணிக்கவும், அந்தத் தரவை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவும் பேஸ்புக்கினை அனுமதிக்கும் என்று இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) தெரிவித்துள்ளது.


$ads={2}


வாட்ஸாப்பின் புதிய தனியுரிமை கொள்கை, வாட்ஸாப் சேவை மற்றும் தரவுகளை கையாளும் விதம், வாட்ஸாப் சேவையை பயன்படுத்தும் வர்த்தகங்கள் பேஸ்புக் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவது மற்றும் பயனாளிகளின் உரையாடல்களை கையாள்வது மற்றும் பேஸ்புக் சார்ந்த சேவைகளுடம் இணைந்து செயல்படும் விதம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


இந்த புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் வாட்ஸாப் பயன்பாட்டின் சேவை விதிமுறைகள் பெப்ரவரி 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸாப் நிறுவனம் பயன்பாட்டின் அறிவிப்பு மூலம் பயனர்களுக்குத் தெரிவித்துள்ளது. 


"எனவே, பெப்ரவரி 08 முதல் வாட்ஸாப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் புதிய விதிமுறைகள் மற்றும் புதிய தனிப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் அதை ஏற்க விரும்பாத பயனர்கள்,  பெப்ரவரி 08 முதல் வாட்ஸாப் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இழப்பார்கள் ”எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.