
இதன்படி, கண்டி - பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பமுனகம திவனவத்த கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத் தளதிபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், எஹலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரகல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.