நாட்டில் மேலும் சில பகுதிகளில் இன்று (25) அதிகாலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன.
அதன்படி, கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை 1C, கல்முனை 1E, கல்முனை 2, கல்முனை 2A, கல்முனை 2B, கல்முனை 3A, ஆகிய பகுதிகளிலும் கல்முனை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை 1MD, மற்றும் கல்முனை குடி 1, கல்முனை குடி 2, கல்முனை 3MD, ஆகிய பகுதகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தொட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலக்கம் 140 பொலான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் மல்கோனிய பகுதி இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
அத்துடன் பூஜாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளியகொட்டுவ மற்றும் கல்ஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.