வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை திருப்பியழைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை திருப்பியழைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்!


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்குத் திருப்பியழைத்து வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று (19) முற்போக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு பெண்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 'நாட்டின் பாரத்தைச் சுமக்கும் புலம்பெயர் பணியாளர்களைக் கைவிடாதிருப்போம்', 'வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் சுரண்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.


-நா.தனுஜா





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.