இலங்கையில் நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் முழு விபரம் (தமிழில்) - 7 மாவட்டங்களில் ஒரு தொற்றாளரும் பதிவாகவில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் முழு விபரம் (தமிழில்) - 7 மாவட்டங்களில் ஒரு தொற்றாளரும் பதிவாகவில்லை!

கடந்த மூன்று நாட்களில் ஏழு மாவட்டங்களில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என்று தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுள்ளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு மூன்று நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை என மையம் தெரிவித்துள்ளது. மேலும் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேற்று தலா ஒரு கொரோனா தொற்றாளர் பதிவாகியுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.


$ads={2}

இருப்பினும், நேற்று அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் (144 தொற்றாளர்கள்) கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகின. நீர்கொழும்பு பகுதியிலேயே அதிக எண்ணிக்கையிலான 77 பேர் பதிவாகியுள்ளனர், இதில் பல்லன்சேனை சிறையில் இருந்து 71 தொற்றாளர்களும், நீர்கொழும்பு சிறையில் இருந்து 5 தொற்றாளர்களும் உள்ளடங்குவர். கம்பாஹா பிரதேசத்தில் 16 தொற்றாளர்களும் மற்றும் பியாகம பகுதியில் இருந்து 12 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர்.

கண்டி மாவட்டத்தில் நேற்று பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 96 ஆகும். அதன்படி கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து 21 பேரும், அலவத்துகொடை பகுதியிலிருந்து 20 பேரும், கம்பளை பகுதியிலிருந்து 10 பேரும் இனங்காணப்பட்டனர்.

இருப்பினும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று 47 தொற்றாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக கோவிட் 19 பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸை பிரதேசத்திலேயே அதிக எண்ணிக்கையிலான 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாரஹன்பிட்ட பகுதியில் இருந்து 10 பேரும், பொரளை பகுதியிலிருந்து 7 பேரும், நுகேகொடை பகுதியிலிருந்து 6 பேரும் நேற்று பதிவாகியுள்ளனர்.

$ads={1}
இதற்கிடையில், பொலன்னறுவையில் 43 தொற்றாளர்களும், குருநாகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த 33 தொற்றாளர்களும் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 31 தொற்றாளர்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 22 தொற்றாளர்களும் ல், களுத்தரை மாவட்டத்தில் இருந்து 12 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய 31 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.