நேற்று (12) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் - மாவட்ட ரீதியில் முழுத் தொகுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று (12) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் - மாவட்ட ரீதியில் முழுத் தொகுப்பு!

நேற்று (12) இலங்கையில் புதிதாக 588 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

அவர்களுள் நால்வர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கை பிரஜைகளாவர்.

ஏனைய 584 பேரில் அதிகமான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று (13) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 49537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 42,621 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


$ads={2}

6,675 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு – 13, ஹங்வெல்லை, மாத்தளை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் (12) நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

இதனை அடுத்து, இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 80 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6,606 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மாலைதீவு, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 197 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.