WATCH: ஏமன் நாட்டின் விமான நிலையத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: ஏமன் நாட்டின் விமான நிலையத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம்!


ஏமன் நாட்டின் விமான நிலையத்தில் இன்று (30) பிற்பகல் பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மத்திய கிழக்கு நாடான ஏமனின் புதிய ஐக்கிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சவூதியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பின் யேமனுக்கு வந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


$ads={2}


அமைச்சர்கள் விமானத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, குறைந்தபட்சம் இரு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்த AFB செய்தியாளர் தெரிவித்துள்ளர்.


இச்சம்பவங்களில் பலர் காயமடைந்த எனவும் ஆனால், அரசாங்க அதிகாரிகள் எவரும் காயமடையவில்லை எனவும் AFBயிடம் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கமும், தென் பகுதி பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களும் இணைந்து புதிய அமைச்சரவையொன்றை கடந்த 18 ஆம் திகதி அமைத்தனர்.


$ads={1}


இவர்கள் கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பின்னர் ஏமனுக்குத் திரும்பிய வேளையில் இவ்வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


ஏமனில் வட பகுதி ஹெளதி கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராடி வருகின்றனனர்.  குறிப்பிடத்தக்கது. தலைநகர் சனாவின் பெரும் பகுதி ஹெளதீ கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.