WATCH: 30 சிசுக்களை விற்பனை செய்து மோசடி; மாத்தளை, உக்குவெல பகுதியில் நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: 30 சிசுக்களை விற்பனை செய்து மோசடி; மாத்தளை, உக்குவெல பகுதியில் நபர் கைது!

கர்ப்பிணி பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு உற்படுத்தி அவர்களுடைய சிசுக்களை விற்பனை செய்யும் மோசடி வியாபாரம் ஒன்று தொடர்பில் பொலிஸார் இனம்கண்டுள்ளனர்.

குழந்தைகள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த மோசடியில் ஈடுபட்ட 47 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (21) மாத்தளை, உக்குவெல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

இணையத்தின் ஊடாக விளம்பர காணொளி ஒன்றை தயாரித்து குறித்த நபர்கள் இந்த மோசடியை மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் நடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை சந்தேக நபர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்து, ஒப்பந்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு குழந்தைகள் பிறந்தவுடன் குறித்த குழந்தைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இந்த மோசடியை ´BABY FARM´ என குறிப்பிடுவதாகவும் இதனுடன் தொடர்புடைய 12 கர்ப்பிணி பெண்களை பொலிஸார் இனங்கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுள் 05 பேரின் குழந்தைகள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று குழந்தைகளுடன் தாயார் இருப்பதாகவும் மேலும் 12 கர்ப்பிணி பெண்கள் சந்தேக நபரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அவ்வாறு சுமார் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.