கைலாசா செல்ல விரும்புபவர்களுக்கு இலவச விசா மற்றும் டிக்கெட்! நித்தியானந்தாவின் அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைலாசா செல்ல விரும்புபவர்களுக்கு இலவச விசா மற்றும் டிக்கெட்! நித்தியானந்தாவின் அதிரடி அறிவிப்பு!

கைலாசா நாட்டிற்கு வர விரும்புபவர்கள் இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தன்னுடைய ஆசிரமத்தை உருவாக்கினார்.

இந்தியா மட்டுமின்றி இவருக்கு என்று வெளிநாட்டிலும் பக்தர்கள் உள்ளனர். இதன் காரணமாக இவருடைய செல்வாக்கு உயர்ந்தது.

$ads={2}

ஆனால், காலப்போக்கில் நித்தியானந்தா, நடிகை ரஞ்சீதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ, அதன் பின் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது, வற்புறுத்தி வேலை செய்ய வைப்பது என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.

ஆனால், இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, கைலாசா என்று ஒரு தனிநாட்டை உருவாக்கி அங்கு தன்னுடைய ஆசிரம நிர்வாகிகளுடன் இருந்து வருகிறார்.

அங்கிருந்த படி தொடர்ந்து வீடியோவை வெளியிட்டு வரும் இவர், சில மாதங்களுக்கு முன்பு கைலாசாவிற்கான கொடி, கைலாசாவிற்கான பாஸ்போர்ட் போன்றவைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தற்போது, கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் மின்னஞ்சலில் (இ-மெயில்) விண்ணப்பம் செய்யலாம் என்றும், எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா வரை சொந்த செலவில் வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு கருடா என பெயரிடப்பட்டுள்ள சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, மீண்டும் அவுஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மூலம் - இந்திய ஊடகம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.