கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம்! -சுதத் சமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம்! -சுதத் சமரவீர


நாட்டில் வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்பதால் நாட்டில் கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.


இந்த வைரஸ் பிரித்தானியா அல்லது ஐரோப்பாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாறக்கூடும் என்பதனால் விரைவில் வைரஸிலிருந்து விடுபடுவது மிக முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


$ads={2}


ஒருவர் புதிய கொரோனா பிறழ்வுக்கு ஆளானாரா என்பதை அடையாளம் காண்பது கடினம் என்றும் ஏனெனில் பெரும்பாலான கொரோனா தொற்று நோயாளர்கள் அறிகுறியற்றவர்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.


ஒரு சாதாரண PCR சோதனையால் வைரஸின் விகாரத்தை வேறுபடுத்த முடியாது ஏறணும் மரபணுக்கூறுகளை ஆய்வு செய்வதிலிருந்து மட்டுமே அடையாளம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒக்டோபர் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனக் கூறிய அவர்,மக்கள் ஒத்துழைப்பினை வழங்கினால் கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.