உங்கள் விசாரணையில் நம்பிக்கை இல்லை! அரசாங்கத்திடம் நேரடியாக கூறிய சஜித்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உங்கள் விசாரணையில் நம்பிக்கை இல்லை! அரசாங்கத்திடம் நேரடியாக கூறிய சஜித்!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை குறித்து சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் முன்னெடுக்கும் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.


இந்த வன்முறை குறித்து சுயாதீன விசாரணை அவசியம் என அவர் பாராளுமன்றில் உரையாற்றிய போது வலியுறுத்தியுள்ளார். 


விசாரணைகள் உண்மையை கண்டறிவதற்காக பக்கச்சார்பற்றவையாக காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சிறைச்சாலை வன்முறையுடன் தொடர்புபட்ட ஒருவர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றால் அது எவ்வாறு சுயாதீனமாக காணப்படும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


$ads={2}

கொரோனா வைரஸ் மஹர சிறைக்குள் பரவியதை தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் PCR பரிசோதனை அவசியம் என வேண்டுகோள் விடுத்து அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாத பின்னரே இந்த வன்முறை வெடித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.