பௌத்த பிக்குகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசாங்கத்தினது திட்டம்! -முஜிபுர் ரஹ்மான்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பௌத்த பிக்குகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசாங்கத்தினது திட்டம்! -முஜிபுர் ரஹ்மான்


பௌத்த பிக்குகளினால் நேற்றைய தினம் (28) ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசாங்கத்தின் திட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்யக் கூடாது எனக் கோரி இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டிருந்தது.


இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பௌத்த பிக்குகளும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தவர்கள் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


$ads={2}


உலகில் சுமார் 200 நாடுகள் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் பலர் கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதில் பிரச்சினைகள் ஏற்படாது என அறிவித்துள்ள நிலையில் அரசாங்கம் ஏதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


இனவாதத்தை தூண்டி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இனவாதத்தைக் கொண்டே தனது இயலாமையை மூடி மறைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இன்றைய தினம் வீதியில் இறங்கி போராடியவர்கள் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் வீதியில் இறங்கியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.