கொரோனா தொற்றுடன் விருந்துபசாரம் கொடுத்த மருத்துவர் ! பலர் தனிமைபடுத்தலில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுடன் விருந்துபசாரம் கொடுத்த மருத்துவர் ! பலர் தனிமைபடுத்தலில்

கண்டி, கம்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட 65 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.


$ads={2}

குறித்த வைத்தியர் இடமாற்றம் பெற்று வேறொரு இடத்திற்கு செல்லவிருந்த நிலையில் வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

குறித்த விருந்துபசாரம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த வைத்தியருக்கு கடந்த 06 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கராபிடிய வைத்தியசாலையில் கல்வி பயிலும் மருத்துவ மாணவியான அவரது மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த வைத்தியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி குறித்த வைத்தியர் தனது மனைவியை இறுதியாக சந்தித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில்,இவ்வைத்தியசாலையின் 6,9 இலக்க வாட்தொகுதிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வாட்டு தொகுதிகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மற்றும் கம்பளை தனியார் வைத்தியசாலை ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்துள்ளது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.