உக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் மூவருக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் மூவருக்கு கொரோனா உறுதி!


இலங்கைக்கு வருகை தந்த மூன்று உக்ரேனியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் கூடிய விஷேட விமானமொன்று கடந்த 28 ஆம் திகதி மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்திருந்தது.


$ads={2}

ஸ்கைஅப் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில் குறித்த பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் நேற்றைய தினமும் (29) இரண்டாவது கட்டமாக 204 உக்ரேன் நாட்டு பயணிகள் இலங்கையை வந்தடைந்தனர்.

இந்த நிலையில், குறித்த சுற்றுலா பயணிகள் 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொற்று காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளது.
$ads={1}



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.