இந்த விபத்து குறித்து விசாரிக்க வான் படை தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நியமித்த குழுவால் இது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று வான் படை தெரிவித்துள்ளது.
இந்த வானூர்தி சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக இது பயன்பாட்டில் இருந்து வந்ததாக வான்படையின் பேச்சாளர் கெப்டன் துஷாந்தா விஜேசிங்க தெரிவித்தார்.
$ads={2}
PT-6 வானூர்தி சீனா தேசிய ஏரோ - தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கோர்ப்பரேஷனிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது.
இந்த நிறுவனம் சீன அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு நிறுவனமாகும், இது மற்ற நாடுகளுக்கு இராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.
இதேவேளை பி.டி -6 வானூர்தியின் செயற்பாடுகளை இலங்கை வான் படை நன்கு அறிந்திருப்பதால் தற்போது சீன உதவியை நாட வேண்டிய அவசியமில்லை.
விபத்து குறித்து நிபுணர்களின் ஆலோசனையோ அல்லது தொழில்நுட்ப அறிக்கையோ பெற வேண்டியது அவசியம் என்று குழு உணர்ந்தால், சீனாவிடம் உதவி கோரப்படும் என்று வான்படை பேச்சாளர் தெரிவித்தார்.