கந்தளாயில் விபத்துக்குள்ளான வான் படையின் வானூர்தி தொடர்பாக சீனாவின் உதவியை நாடும் இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கந்தளாயில் விபத்துக்குள்ளான வான் படையின் வானூர்தி தொடர்பாக சீனாவின் உதவியை நாடும் இலங்கை

திருக்கோணமலை- கந்தளாயில் விபத்துக்குள்ளான வான் படையின் பி.டி -6 வானூர்தி தொடர்பாக சீனாவின் உதவியை நாட இலங்கை தயாராகிறது.

இந்த விபத்து குறித்து விசாரிக்க வான் படை தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நியமித்த குழுவால் இது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று வான் படை தெரிவித்துள்ளது.

இந்த வானூர்தி சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக இது பயன்பாட்டில் இருந்து வந்ததாக வான்படையின் பேச்சாளர் கெப்டன் துஷாந்தா விஜேசிங்க தெரிவித்தார்.

$ads={2}

PT-6 வானூர்தி சீனா தேசிய ஏரோ - தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கோர்ப்பரேஷனிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது.

இந்த நிறுவனம் சீன அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு நிறுவனமாகும், இது மற்ற நாடுகளுக்கு இராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.

இதேவேளை பி.டி -6 வானூர்தியின் செயற்பாடுகளை இலங்கை வான் படை நன்கு அறிந்திருப்பதால் தற்போது சீன உதவியை நாட வேண்டிய அவசியமில்லை.

விபத்து குறித்து நிபுணர்களின் ஆலோசனையோ அல்லது தொழில்நுட்ப அறிக்கையோ பெற வேண்டியது அவசியம் என்று குழு உணர்ந்தால், சீனாவிடம் உதவி கோரப்படும் என்று வான்படை பேச்சாளர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.