நுவரேலியா - கொட்டகலை பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நுவரேலியா - கொட்டகலை பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு தொற்று உறுதி!


ஒன்றரை வயது குழந்தை உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நுவரேலியா - கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.


கடந்த 23ஆம் திகதி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குற்பட்ட பகுதிகள் 06 பேருக்கு மேற்கொண்ட PCR பரிசோதனையின் அறிக்கை இன்று (26) மாலை வெளியாகியதிலிருந்து 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


$ads={2}


தலவாகலை கூமூட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உட்பட 35 வயதுடையபெண் ஒருவர், 20 வயது இளைஞன் ஒருவருமாக மூவரும், தலவாகலை ஒலிரூட் தோட்டத்தில் 56 வயது ஆண் ஒருவரும், கொட்டகலை டிரைட்டன் கே.ஒ பிரிவில் 59 வயது பெண் ஒருவர், டிரைட்டன் டீ.டி பிரிவில் 20 வயது பெண் ஒருவர், டெரிகிளேயர் தோட்டத்தில் 37 வயதுடைய ஆண் ஒருவருமாக ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் , கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரப்பகுதியில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் மேற்குறிப்பிட்ட 07 தொற்றாளர்களும் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.