சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தில் விசேட நடவடிக்கைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தில் விசேட நடவடிக்கைகள்!

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படவுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு தனியார் துறையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடாத்துவதில் ஏற்கனவே தனியார் துறையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப்  பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

$ads={2}

எவ்வாறாயினும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தினூடாகவே பி.சி.ஆர் பரிசோதனை நடாத்திவருவதாக சுகாதார சேவைகள் பிரதி  பணிப்பாளர்  நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.