தென் மாகாணத்தில் 771 நபர்களுக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தென் மாகாணத்தில் 771 நபர்களுக்கு கொரோனா தொற்று!

தெற்கு மாகாணத்தில் இதுவரை 771பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாணத்தின் கொரோனா தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய காலி மாவட்டத்தில் 438 பேருக்கும் மாத்தறை மாவட்டத்தில் 266பேருக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 67பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.


$ads={2}

இவ்விடயம் தொடர்பாக கொரோனா தகவல் மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சாமரா மகாகமகே தெரிவித்துள்ளதாவது, “தெற்கு மாகாணத்தில் நேற்று மாத்திரம் 11பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலியில் 6 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் 5பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாத்தறை மாவட்டத்தில் புதிய தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை தெற்கு மாகாணத்தில் 266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். காலியில் இருந்து 167 பேரும், மாத்தறையில் இருந்து 72பேரும் ஹம்பாந்தோட்டையைச் சேரந்த 27 பேரும் இவ்வாறு தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.