காத்தான்குடியில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக கூறப்படும் 6 பெண்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காத்தான்குடியில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக கூறப்படும் 6 பெண்கள் கைது!

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதானியாகக் கருதப்படும் பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்று தற்கொலைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றதாக கூறப்படும் 06 பெண்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 06 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன. 

இதில், பெண் ஒருவரும் அவரது 03 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் நேற்று கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

$ads={2}

அண்மையில், மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழுவினர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 20 வயதான இளைஞர் ஒருவரைக் கைது செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய இந்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என தெரிய வருகிறது.

இந்த 06 பெண்களும் கைது செய்யப்பட்ட விவகார விசாரணைகளில் ஏற்கனவே 15 ஆண்களும் மூன்று பெண்களுமாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தற்போது மேலும் 06 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

-எம்.எப்.எம்.பஸீர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.