200 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் டிசம்பர் 26 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்களுக்கு வர உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAA) தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பயண முகவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, விமான நிலையத்தில் கிருமி நீக்கம், சுங்க மற்றும் குடிவரவு நடவடிக்கைகள், அத்துடன் இதுபோன்ற பயண முகவர்களுக்கு ஹோட்டல்களை முன்பதிவு செய்தல் மற்றும் பயணங்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்வது குறித்து அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார்.
மேலும் இந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருகை தரமுடியாத மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழைய முடியும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்
இருப்பினும், இம்முறையில் வரும் இலங்கையர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதோடு, இதற்காக இலங்கை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 3,500 பிசிஆர் செய்யக்கூடிய திறன் உள்ளதால், ஒரு நாளைக்கு வரும் இலங்கையர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 3,500 ஆகு உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.