பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) 2020 இருபதுக்கு இருபது போட்டித் தொடர் எட்டு மாதங்கள் காத்திருந்தபின் அதன் இரண்டு இறுதிப் போட்டிகள் இடம்பெற்றது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் லீக் கட்டத்திற்குப் பிறகு போட்டியை திடீரென நிறுத்த வேண்டியிருந்தது.
$ads={2}
நவம்பர் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் தெரிவாகுவதற்கு நேற்று இடம்பெற்ற இரண்டாவது எலிமினேட்டரில் கலண்டர்ஸ் அணியானது, முல்தான் சுல்தான் அணியினை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தெரிவாகியது. இதன் போது கலண்டர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் தனது நான்கு ஓவர்களின் போது மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார், அவற்றில் ஒன்று புகழ்பெற்ற ஷாஹித் அஃப்ரிடியின் விக்கட்டாகும்.
இறுதி போட்டியில் லஹோர் கலண்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
LALA I'M SORRY 😭🙏🏾#HBLPSLV #PhirSeTayyarHain #MSvLQ pic.twitter.com/QoMJG5Lhht
— PakistanSuperLeague (@thePSLt20) November 15, 2020