கொழும்பு நகருக்கு மிகவும் அருகிலுள்ள கல்கிசை கடற்கரையில் 25 டால்பின் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 25 டால்பின்கள் இன்று (25) காலை கல்கிசை கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.
இதனையடுத்து கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை மீட்டு கரையின் ஒதுக்குப் புறமாக சேர்த்துள்ளனர்.
$ads={2}
மேலும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இதுபற்றி தகவல் அளித்துள்ளனர்.
இதேவேளை ஊரடங்குச் சட்டம் என்றும் பாராமல் கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கிய டால்பின்களைப் பார்ப்பதற்கு மக்கள் வெள்ளம் திரண்டதால் அங்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டதோடு பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் டால்பின்கள் கரையொதுங்கிய கல்கிசை கடற்கரைக்கு சற்று நெருக்கமாக உள்ள பாணந்துறை பிரதேச கடற்கரையில் கடந்த மாதம் இவ்வாறு நூற்றுக்கும் அதிகமான திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதுங்கிய சம்பவமும் இடம்பெற்றிருந்தது.
அவ்வாறு கரையொதுங்கிய திமிங்கிலங்களில் மூன்று மீன்கள் இறந்ததோடு, ஏனைய திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்புவதற்கு அதிகாரிகள் இரவோடிரவாக நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதேபோன்று கொழும்பு மாவட்டத்திற்கு நெருக்கமான களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை நகர கடற்கரையிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இறந்த நிலையில் சில டால்பின்கள் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.