நாடு பூராகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், அதனை நீக்குவது தொடர்பான தீர்மானம் நாளை (29) எடுக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று காலை கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 69 பேர் பெண்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.