தாவூதி போஹ்ரா சமூகத் தலைவர், சையத்னா முபத்தல் சைபுதீன் மற்றும் அவரை பின்பற்றும் 36 நபர்கள் கடந்த திங்கள்கிழமை (16) சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் பண்டாரவளையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னும், இலங்கைக்கு வந்த உடனேயும் தேவையான PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் அனைவரும் இலங்கை அரசு வகுத்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு இணங்க, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடுமையாக பின்பற்றுகின்றதாக தெரியவந்துள்ளது.
"சமுதாயத்தின் பொறுப்புள்ள உறுப்பினர்களாக, சமூகத்தின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களது மிக உயர்ந்த முன்னுரிமையாகும், மேலும் அந்த உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த விஜயத்தை எளிதாக்கிய வெளியுறவு அமைச்சகம், இலங்கை இராணுவம் மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் ”என தாவூதி போஹ்ரா சமூகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.