இலங்கை : கொரோனா இரண்டாம் அலை : தொகுப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை : கொரோனா இரண்டாம் அலை : தொகுப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (19) 15 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 60 பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 9 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர்குணமடைந்துள்ளனர்.


$ads={2}


அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 18 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.

கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.