கொழும்பில் நிலைமை அபாயகரமானது! எடுக்கப்படவிருக்கும் விசேட தீர்மானங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் நிலைமை அபாயகரமானது! எடுக்கப்படவிருக்கும் விசேட தீர்மானங்கள்!

கொழும்பின் நிலைமை அபாயகரமானது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் பதிவான கொரொனா மரணங்களில் 91 சத வீதமான மரணங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

அராசங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட பிரதிநிதி வைத்தியர் ஹரித அலுத்கே ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் எந்த பகுதியில் ஆபத்து மையமாகியுள்ளது என்பதனை நாம் புதிதாக சொல்லத்தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மாவட்டங்களில் மொத்தமாக 9 சத வீதமான கொரொனா மரணங்களே பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே மேல் மாகாணத்தில் விசேடமான தீர்மானங்களை எடுப்பதற்கு நாம் தயங்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

மேல் மாகாணத்திலும் கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான ஆபத்து நிலைமை காணப்படுகின்றது என வைத்தியர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.