மீன் சாப்பிட அச்சப்பட வேண்டுமா? வைத்திய நிபுணர் பசன் ஜயசிங்க விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீன் சாப்பிட அச்சப்பட வேண்டுமா? வைத்திய நிபுணர் பசன் ஜயசிங்க விளக்கம்!


மீன் சாப்பிடுவதற்கு வீணாக அச்சப்படத் தேவையில்லை. பேலியகொடை மீன்சந்தையில் ஏற்பட்ட கொராேனா தொற்று மீனில் இருந்து ஏற்பட்டது அல்ல. மீன் வியாபாரியிடமிருந்தே ஏற்பட்டிருக்க வேண்டும் என தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.


 மீன் சாப்பிடுவதற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


இதுதொடர்பாக அவர் தொர்ந்தும் தெரிவிக்கையில்,


பேலியகொடை மொத்த மீன் விற்பனை சந்தையில் கொராேனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மீன் சாப்பிடுவதற்கு வீணான பயத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.


$ads={2}


மீன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதனால் தற்போதைய நிலையில் எமது ஆகாரத்தில் மீனை சேர்த்துக்கொள்வது அத்தியாவசியமாகும்.


அத்துடன் இலங்கை மக்கள் மீன் சமைக்கும் முறையின் பிரகாரம்  அதனுள் எந்தவொரு வைரஸும் இருக்க முடியாது. அதிகூடிய வெப்பத்தில் மீன் சமைப்பதன் மூலம் அதனுள் இருக்கும் பாதகமானவைகள் அழிவடைந்து செல்கின்றன. மீன் சமைத்த பின்னர் சவர்க்காரமிட்டு கைகள் மற்றும் அதற்காக பயன்படுத்திய பாத்திரங்களை கழுவிக்கொள்வது அவசியமாகும்.


மேலும் பேலியகொடை மொத்த மீன் சந்தைக்கு கொராேனா தொற்று பரவியது மீன்கள் ஊடாக அல்ல. மாறாக மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் மூலமாகவே பரவியிருக்கும் என நம்புகின்றோம்.


அதனால் மக்கள் வீணாக அச்சப்பட்டு மீன் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். மீன் வகைகளிலே அதிக நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கின்றது. அதனால் எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள மீன் பிரதான உணவாகும் என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.