கண்டி - திகன கட்டிடங்கள் நிர்மாணிக்க வேண்டாம்! புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - திகன கட்டிடங்கள் நிர்மாணிக்க வேண்டாம்! புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் எச்சரிக்கை!

கண்டி - திகன பகுதியை அண்மித்த பகுதியில் அண்மையில் பதிவான சிறிதளவான நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல இதனை தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் அடங்கும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பூமியின் உள்ளே காணப்படும் சுண்ணாம்புக்கல் அடுக்கில் ஏற்படும் துளைகள் மற்றும் விரிசல்களுடன் அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக இதுபோன்ற அதிர்வுகள் ஏற்படுகின்றன.

இந்த நில அதிர்வு 2 தொடக்கம் 3 ரிக்டர் அளவில் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

$ads={2}

இவ்வாறான சிறியளவான நில அதிர்வு உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 3 லட்சம் தடவை இடம்பெறுவதாக அந்த பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்காலத்தில் கண்டி - திகன பகுதியினுள் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.