
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சபைக்கு பிரசன்னமாகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு அருகிலுள்ள ஆசனத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமர்ந்திருந்தார்.
$ads={2}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்ததுடன், மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.
2019ஆம் ஆண்டு முதல் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.
இந்த நிலையில், மூன்று ஜனாதிபதிகளும் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் கலந்துக்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.