கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான க.பொ.த உயர்தர மாணவி பரீட்சைக்கு தோற்ற இன்று (03) விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி வரும்வாழைச்சேனை - கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மாணவியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி கண்டறியப்பட்டது.
ஓட்டமாவடியில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை எழுதி வந்த நிலையிலே அம்மாணவிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
$ads={2}
அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பரீட்சையை குறித்த மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்து எழுத பரீட்சை திணைக்களத்தால் விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
இதேவேளை, மேற்படி, மாணவியுடன் முன்னதாக பரீட்சை தோற்றிய ஏனைய மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.