கிளிநொச்சியில் முதல் கொரோனா தோற்றாளர் அடையாளம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிளிநொச்சியில் முதல் கொரோனா தோற்றாளர் அடையாளம்!!


கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


கொழும்பு 13 அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இவர் கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மபுரம் கிராமத்திற்கு வருகை தந்துள்ளார். குறித்த நபர் வருகைதந்தவுடன் அவர் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதார பரிசோதகரும் விழிப்பாக செயற்பட்டமையால் உடனடியாக குறித்த நபர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவர் பணியாற்றிய உணவக உரிமையாளர் மற்றும் அங்குள்ள கடமையாற்றிய சில பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினையடுத்து இவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


$ads={1}


இதன் போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளங்கள் இனம் காணப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் இன்றிய மாவட்டமாக இருந்த நிலையில் நேற்று (02) இரவு ள் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 


இருப்பினும் பொது மக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு நிலைமைகள் இல்லை எனவும், முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இருக்குமாறும் அவசிய தேவைகளை தவிர்ந்து வெளியில் செல்வதனை தவிர்க்குமாறும் பொது மக்களிடம் சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.