புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றி புது சர்ச்சை கிளப்பியுள்ள பிரான்ஸ் அரசு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றி புது சர்ச்சை கிளப்பியுள்ள பிரான்ஸ் அரசு!!


பேச்சுரிமை என்ற பெயரில் மற்ற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தி, அதனால் பல நாடுகளில் பிரச்சினைகள் வெடித்த நிலையிலும், பிரான்ஸ் சர்ச்சையை நிறுத்தியது போல் தெரியவில்லை. தற்போது சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

அந்த சட்டத்தின்படி, ஒரு பெண் நோயாளி தான் ஒரு ஆண் மருத்துவரை பார்க்க விரும்பவில்லை என்றோ, ஒரு ஆண் நோயாளி தான் ஒரு பெண் மருத்துவரை பார்க்க விரும்பவில்லை என்றோ கூற முடியாது. அப்படி கூறினால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 75,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.

$ads={2}

Anti-Discrimination Law என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தின்படி, எதிர் பாலரான மருத்துவரை சந்திக்க மறுத்தல், பாலின பாகுபாடு காட்டுவதாக கருதப்படும்.

இந்த தகவலை பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ளார். 

ஆனால், பிரான்ஸ் சுகாதாரத்துறையின் இணையதளத்தில், சட்டப்படி ஒவ்வொரு நோயாளிக்கும் தனது மருத்துவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.