
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவம் கவலையளிக்கும் வகையில் உள்ளன.
ஏனெனில், சர்ச்சைக்குரிய முகம்மது நபியின் கேலிச்சித்திரங்களை காட்டியதற்காக ஆசியர் சாமுவேல் பாடி என்பவர் தீவிரவாதியாக தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யபட்டார்.
ஆசிரியரின் இறுதிச் சடங்கில் பேசிய இமானுவல் மேக்ரான், கேலிச்சித்திரக் கலாச்சாரம் தொடரும், அது தங்கள் பேச்சுரிமை, உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை என்று கூற, பல இஸ்லாமிய நாடுகள் மேக்ரானின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.
அதுமட்டுமின்றி ஊடகம் ஒன்றில் பிரான்ஸ் பிரெஞ்சு இஸ்லாமியர்களை இழிவு படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து ஜனாதிபதி மேக்ரான் அளித்துள்ள விளக்கத்தில் பிரெஞ்சு இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் செயலை அரசு ஒரு போதும் அனுமதிக்காது. எங்கள் யுத்தம் எல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரானதே தவிர, இஸ்லாம் மதத்துக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார்.