மிகக்குறைந்த கொரொனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களிடம் இருந்து வைரஸ் பரவாது? தொற்றுநோய் பிரிவின் பிரதானி தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிகக்குறைந்த கொரொனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களிடம் இருந்து வைரஸ் பரவாது? தொற்றுநோய் பிரிவின் பிரதானி தெரிவிப்பு!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறுபவர்களுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுப்பது குறித்து சுகாதார அமைச்சினால் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.


தொற்று அறிகுறிகள் அற்ற அல்லது மிகக் குறைந்தளவில் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களிடம் காணப்படும் வைரஸ் சாதாரணமாக 10 நாட்களின் பின்னர் பிறருக்கு பரவாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வைத்தியசாலையிலிருந்து செல்பவர்களுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுக்காது மேலும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு மாத்திரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


$ads={2}


இதேவேளை கடும் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைகளின் பின்னரே வீட்டுக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


அதேவேளை, கடும் தொற்று அறிகுறிகள் உள்ள தொற்றாளர்கள் கொழும்பு IDH வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். 


இதன் காரணமாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் வைத்தியசாலையில் மேலதிகமான சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையிலேயே இருக்கும். எனவே IDH வைத்தியசாலையில் சிகிச்சை படுக்கைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.