எச்சரிக்கை : அனுராதபுரத்திற்குள் ஊடுருவிய கொரோனா!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எச்சரிக்கை : அனுராதபுரத்திற்குள் ஊடுருவிய கொரோனா!!

அனுராதபுரம் மாவட்டத்தில் கொவிட் 19 கொரோனா வைரஸ் 16 பேருக்கு தொற்றியுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய்ப்பிரிவு விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக்கா தெரிவித்தார்.

இவர்கள் மத்திய நுவகரம்பலாத, கிழக்கு நுவகரம்பலாத, தலாவ, ராஜாங்கன, இபலோகம, ரம்பேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இதில் ஐந்து பேர் மத்திய நுவகரம்பலாத பிரதேச செயலாளர் பிரிவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.


$ads={2}


இவர்கள் அனைவரும் பிரண்டெக்ஸ் ஆடைத் தொழிற்சாலை, பேலியகொட மீன் சந்தை வியாபார நிலையங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவரோடு தொடர்பை பேணியவர்கள் என கண்டுபிடிக்கப்பட்ட 1700 பேர் பல்வேறு இடங்களில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து, நோய் எதிர்ப்பு ஆகாரங்களை உட்கொண்டு சமூக இடைவெளியுடன் நடந்து கொண்டால் இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம் எனவும் அனுராதபுரம் தொற்று நோய் பிரிவு விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக்கா தெரிவித்தார்.

யாழ் நியூஸ் செய்தியாளர் முஹம்மட் ஹாசில்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.